போர்ச்சூழலில் பெண் -3


பெண்களின் மீதான பாலியல் வன்முறை என்பது போர்க்குற்றம்,மனிதத்திற்கு எதிரான குற்றம்,இனப்படுகொலை,சித்திரவதை ஆகியவற்றில் ஆகக்கடைசியாக மட்டுமே பார்க்கப் படுகிறது.இந்நிலையில் உச்சபட்சமான அனைத்தையும் சந்திக்கிறவளாக பெண் இருக்கிறாள்.

பாலஸ்தீன அமெரிக்க பெண் கவிஞரான லேனா கலாஃப் டுஃபாஹாவின் ஓடுவதற்கான உத்தரவு எனும் கவிதை போர்ச்சூழலின் அவலத்தைப் பேசுகிறது.

“அவர்கள் போன் செய்து ஓடச் சொல்கிறார்கள்
——
ஓடுவதற்கு ஒரு இடமும் இல்லையென்றாலும் கூட

இதற்கு எந்த அர்த்தமும் இல்லை

எல்லைகள் மூடப்பட்டுவிட்டன உங்கள் கடவுச்சீட்டு

செல்லாமல் போய்விட்டது

கடலால் சூழப்பட்ட இந்த இடத்தில் நீங்கள்

ஆயுள் கைதியாக இருக்கிறீர்கள்

பாதைகள் குறுகிப்போய்விட்டன

உலகில் வேறு எந்த இடத்தைவிடவும் மனிதர்கள்

நெருக்கியடித்துக்கொண்டு வாழும் பகுதி இது
…….
வீட்டிலுள்ளவர்களைக்கூப்பிடக்கூட முடியாது

எதுவும் பொருட்டல்ல

நீங்கள் யாரென்பது கூட பொருட்டல்ல

நீங்கள் மனிதர்கள் தான் என்பதை நிரூபியுங்கள்

நீங்கள் இரண்டு கால்களில்தான் நிற்கிறீர்கள்

என்பதை நிரூபியுங்கள்

ஓடுங்கள்(ப 33 ,குரல் என்பது மொழியின் விடியல்)என்கிற 
பதட்டம் ,உயிரச்சம் ,இக்கவிதையில் விரிவாகபேசப்படுகிறது.

போர் மனிதன் உருவாக்கிய பண்பாடு ,நாகரிகம் சார்ந்த அனைத்தையும் துச்சமாக்குகிறது. பாலியல் வன்முறைக்கு எதிராக போருக்கு இடையிலும் பாதுகாத்துக்கொள்ள பெண்களுக்கு 
அனைத்துவிதமான உரிமைகளும் உள்ளன.அதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடுபெறலாம் என பெண்களுக்காக 
சொல்லும் அதே சட்டம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வல்லுறவு குற்றம் இழைத்தவனுக்கும் பொது மன்னிப்பு வழங்கலாமென 
(சர்வதேச சட்டம் Act. 7 CEDAW; Rome Statute Statute 8(2)(b)(xxii)) கூறுகிறது.

இப்படியான சட்டங்கள் ஒருசார்பு நியாயத்திற்கானவையாகவே இருக்கிறது.போர்சூழ்ந்த அத்தனை இடங்களிலும் பெண்கள் சித்திரவதைகளுக்கும் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டதாற்கான சாட்சிகளும் தடயங்களும் இருக்கின்றன. இன்றைய உடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? வலிமையானவர்களின் கூலிகள் தங்கள் பலத்தை கீழிருப்பவர்கள் மீது அதிலும் கடைசியாக சிறுமிகள் மீது ஏவுவது என்பதில் இச்செயலானது பெண்களும் சிறுமிகளும் இறையாண்மை,வல்லாண்மை,ஏகாதிபத்தியம் என இவை அனைத்தின் மீதும் காறி உமிழ்கின்றனர்.இவை அனைத்தும் அர்த்தமற்ற பொருளற்ற வார்த்தைகளாக அரசின் அகராதிகளில் பங்கு பற்றியிருக்கிறது.

புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு முறையையே மக்கள் 
விரும்புகின்றனர்.அத்துடன் ஒரு புதிய சர்வதேச அரசியல் 
ஒழுங்கும்கூட அவசரமாகத் தேவைப்படுகிறது.”எதிரி தாக்குவதற்கு முன்பே தாக்கும் போர் நடவடிக்கை”போன்ற புதிய கோட்பாடுகளைத் திணிப்பதற்காக,சர்வதேசச் சட்டக்கொள்கைகளுக்குப் புதிய மறு விளக்கங்களை அளிப்பதற்கு சிலநாடுகளை நாம் அனுமதிக்கக் கூடாது.


ஓ! தாக்கப்படுவதற்கு முன்பே தாக்கும் போர் நடவடிக்கை 
யுத்தம் என்று அவர்கள் நம்மை அச்சுறுத்துகிறார்களா?பாதுகாப்பதற்கான பொறுப்பு எனும் கோட்பாடு என்னவாயிற்று? நம்மை யார் பாதுகாக்கப் போகிறார்கள்? –ஹியூகோ சாவேஸ்-வெனிசுலா என ஐ.நாவின் வீட்டா அதிகாரம் குறித்து பேசுகிற சாவேஸின் உரை கவனிக்கத்தக்கது.அமைதியை ஏற்படுத்துவதாக சொல்கிற எந்த ஒரு இராணுவ நடவடிக்கையும் பெண்களை மோசமாகவே நடத்துகிறது.

 1994 இல் ருவாண்டா இன அழிப்புப்போரில் 2,50,000-5,00,000  பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்வில் உட்படுத்தப்பட்டனர்.1990 இல் போஸ்னியாவில் 20,000-50,000 பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்புணர்வில் உட்படுத்தப்பட்டனர். 50,000 64,000 பெண்கள் சியராலியோனில் பாலியல் தாக்குதலுக்கு 
உள்ளானார்கள் என்கிற புள்ளிவிவரங்கள் மிகத்துல்லி யமானவை இல்லை.ஏனெனில் மக்கள் இறப்புகளையும் வன்புணர்வுகளையும் சுயநலம் கருதி பதிவே செய்யாமல் இருட்டடிப்பு செய்கிற நிலையில் பதிவு செய்கிறபோது குறைத்துக் காட்டுகிற போக்கே நிலவுகிறது.

ஐ.நாவில் தலைமைத்துவம் வாய்ந்த அமைதித்தூதுவர்களாக பெண்கள் நியமிக்கப்படாத நிலையில் கென்ய நெருக்கடிநிலையின் போது 2008 இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்று பெண்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்கிற செய்தி சமூக,அரசியல் களத்தில் பெண்கள் பின்னுக்கு உள்ள நிலைக்கான சான்றாகும்.

1960 இல் நைஜீரியாவில் இக்போ என்றழைக்கப்படுகிற 
இனத்திற்கு எதிராக நடைபெறுகிற கோரப்படுகொலைகள்,இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன என்பதைப் பதிவு செய்கிறது.  பயாஃப்ராவை நோக்கி என்கிற புச்சி எமசட்டாவின் நாவல் .இப்போரில் ஒரு லட்சம் இக்போக்கள் அழிக்கப்பட்டனர்.

அதன்பதினாறாம் அத்தியாயம் பெண்களின் யுத்தம் 
என்பதாகும்.
அதில் பெண்களின் மன வலிமை எதிர்ப்பாற்றல்,
தாய்மையோடு குழந்தைகளை சுமந்தோடும் அலைக்கழிப்பு,
கன்னியாஸ்திரிகள் முதியவர்கள் என்ற பேதமின்றி வல்லுறவு நிகழ்த்தப்படுவதும்.குழந்தைகளை குண்டுகளால் துளைத்துக் கொல்வதுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இப்போர்ச்சூழலில்
 பட்டினி கிடந்தே இறந்துபோன எட்டு வயது அண்ணன் மகளின் பெயரைப் புனைப்பெயராகக் கொண்டவர்தான் புச்சி எமசட்டா..

ஆனிஃப்ராங்க் டைரிக்குறிப்பு ,ஜீன் 14 1942 முதல் 22 நாட்கள் இயல்பு வாழ்க்கை 1944 முதல் ஒளிந்துவாழும் வாழ்க்கை பற்றிய 13 வயது பெண்னின் டைரிக்குறிப்பு.
ஹிட்லரால் கொலப்பட்ட யூதர்கள் குறித்த முக்கியமான குறிப்புகளைக்கொண்ட்து.வரலாற்று ஆவணமாக அனொனிமாவைப்போல ,பயாஃப்ராவைப் போல முக்கியத்துவம் கொண்டது.ஏனெனில் இவை வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசுகிறது.மக்களின் மனசாட்சிகளாக நின்று பேசுகிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.