ஓணம் ஆண்டுமலர்


தீபிகா மலையாள மொழி இதழ் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையின் போது ஆண்டு மலரை வெளியிடுகிறது. 2023 ஆம் ஆண்டின் ஆண்டு மலரில் என்னுடைய உயிர்ப்பு சிறுகதை பத்மகுமார் பரமேஸ்வரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. தீபிகா இதழில் வந்துள்ள ஆசிரியர் குறிப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு இங்கு தமிழில் இணைக்கப் பட்டுள்ளது.


பத்மகுமார் பரமேஸ்வரன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரத்தில் பிறந்தார். 20 வருட சேவைக்குப் பிறகு விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பாதுகாப்பு தணிக்கை துறையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் நாவல்கள் மற்றும் கவிதைத் தொகுப்புகளுடன் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்

ச. விஜயலட்சுமி

ஆசிரியர், சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுகிறார். தமிழ் கவிதையில் பெண்ணியம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். பெரும்பாலான எழுத்துக்கள் விளிம்புநிலை மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டுள்ளன. சர்வதேச பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சென்னையில் வாழ்கிறார்.