கல்வி செயற்பாட்டிற்கான அங்கீகாரம்


கடந்த கல்வி ஆண்டின் செயல்பாட்டிற்கான எம் துறையின் சான்றிதழ்கள் தமிழக அளவில் வழங்கப்பட்டன. ( 2022டிசம்பர் 3)

சென்னை மாவட்டத்தில் தேர்வான மூன்று பள்ளிகளில் எம் பள்ளியும் தேர்வானதில் மகிழ்ச்சி. சிறப்பான முறையில் பள்ளிச் செயல்பாட்டிற்கு துணைநின்ற தலைமையாசிரியர்களுக்கான முதல் மூன்று சான்றிதழை அன்றைய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சென்றார்.

எம் பள்ளிக்கான( அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி- தாயார் சாகிப் தெரு) சான்றிதழை எம் துறை அமைச்சர் , பள்ளிக்கல்வித்துறை ஆணையர், சென்னை மாநகராட்சி மேயர் வழி நான் பெற்றுக் கொண்டேன்.

எம் பள்ளி ஆசிரியர்கள், மாணாக்கர், முதன்மைக் கல்வி அலுவலர், அன்னாரின் உதவியாளர், APO அப்துல்லா அவர்கள், பெற்றோர் ஆசிரியர்கழகம், பள்ளி மேலாண்மைக் குழு உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் உதவியும் எம் பள்ளி மேம்பாட்டில் துணை செய்திருக்கிறது. அனைவருக்கும் அன்பும் நன்றியும்.